Wednesday, October 28, 2015


திரை மூடிய பின்னே 
ஓர் ஓவியக் கண்காட்சி,
காவியமே உன் உருவம்தானடி  
என் கண்களுக்குள்,
எனவேதான் பிடிக்கிறது இமை மூடும் உறக்கம் ...

- பிரகாஷ்


என் விழிகள்
உன் உதட்டின்அசைவை அறியும்,
என் செவிகள்
உன் குரலின் ஓசையை அறியும்,
என் சிந்தை
உன் மனதின் ஆசையை அறியும்,
ஆகவே
நீ  பேசும் முன் என்னை செல்லமாய் கிள்ளிவிடு
நான் சற்றே நிஜ உலகிற்கு வந்துவிட.

- பிரகாஷ்

Sunday, October 25, 2015

கரம் சேர் மனமே!...



கோர்த்து சென்றதில்லை
நம் கைகளை. ஆனால்,
கோர்த்து சென்றதுண்டு
 நம் மனங்களை...

** பிரகாஷ் **


Monday, February 9, 2015

காவலாளி


ஆயுதம் ஏந்திய எதிரிகளும்  இல்லை,
அசுர முகம் கொண்ட அரக்கர்களும் இல்லை,
போராடி உன்னை வந்தடைவதர்க்கு.

ஆனால் ,  வேலைகளையும்...
கூலி இல்லாமல் செய்கின்றன,
உன் கண்கள்.

** பிரகாஷ்  **

நேரம்


கரையும் நேரம் உனக்காக என்றால்,
காலம் மொத்தமும் உனக்கே
சமர்ப்பணம்.

** பிரகாஷ்  **