Wednesday, October 28, 2015


திரை மூடிய பின்னே 
ஓர் ஓவியக் கண்காட்சி,
காவியமே உன் உருவம்தானடி  
என் கண்களுக்குள்,
எனவேதான் பிடிக்கிறது இமை மூடும் உறக்கம் ...

- பிரகாஷ்


என் விழிகள்
உன் உதட்டின்அசைவை அறியும்,
என் செவிகள்
உன் குரலின் ஓசையை அறியும்,
என் சிந்தை
உன் மனதின் ஆசையை அறியும்,
ஆகவே
நீ  பேசும் முன் என்னை செல்லமாய் கிள்ளிவிடு
நான் சற்றே நிஜ உலகிற்கு வந்துவிட.

- பிரகாஷ்

Sunday, October 25, 2015

கரம் சேர் மனமே!...



கோர்த்து சென்றதில்லை
நம் கைகளை. ஆனால்,
கோர்த்து சென்றதுண்டு
 நம் மனங்களை...

** பிரகாஷ் **