Monday, October 3, 2016

Tamil Lyrics

உனதென்றுமில்லாத எனதென்றுமில்லாத
உயிரொன்றை உழற்றியவாரே
உற்று நோக்குகிறாய்.
உன் பார்வைக்குள் பற்றிவிடுகிறது
என் குளிர்கால பனி அனைத்தும்.
உன் வாசத்தில் மலர்கிறது
என் கோடை வியர்வையும்.
அருகில் மட்டுமில்லா
அனுதின நினைவிலும் தந்தாய்,
ஆயிரம் ஆண்டின் இன்பம்.
PRAKASH

No comments:

Post a Comment